V2V: `இனி கார்கள் பேசிக்கொள்ளும்’ – மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய தொழிற்நுட்பம்!| ஓர் அலசல் | V2V: ‘Cars will now talk to each other’ – A new technology to be introduced by the Central Government!

Spread the love

இந்த அலைவரிசையைப் பயன்படுத்துவதற்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று தொலைத்தொடர்புத் துறை ஜூன் 10, 2026 அன்று விலக்கு அளித்துள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அலைவரிசையைப் பயன்படுத்தி புதிய வாகனங்களில் V2V சாதனங்களைப் பொருத்த முடியும்.

V2V சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்கள், முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால், ஆபத்தான வளைவுகள் இருந்தால், பாதுகாப்பற்ற முறையில் லேன் மாறினால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் குறுக்கே இருந்தால், அடர்ந்த பனிமூட்டம் அல்லது மோதல் ஆபத்துகள் இருந்தால் ஓட்டுநருக்கு உடனடியாக எச்சரிக்கை மணி அடிக்கும்.

விபத்து

விபத்து
கோப்புப் படம்

உதாரணமாக, உங்களுக்கு முன்னால் செல்லும் ஒரு கார் திடீரென்று பிரேக் போட்டால், அது உங்கள் கண்ணுக்குத் தெரிவதற்கு முன்பே, உங்கள் காரில் இருக்கும் சாதனம் உங்களை எச்சரித்து வாகனத்தின் வேகத்தைக் குறைக்கச் சொல்லும். வழக்கமாக இந்த V2V கருவிகள் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள வாகனங்களைக் கண்டறிந்து செயல்படும் திறன் கொண்டவை. இந்த OBU சாதனத்தின் விலை ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக இது புதிய வாகனங்களில் மட்டுமே பொருத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *