Where has Vijay, who addressed people as “Bro” and “Uncle” during the election campaign, gone? Nainar Nagendran asks-தேர்தல் பிரசாரத்தில் “ப்ரோ”, ”அங்கிள்” என்று பேசிய விஜய் எங்கே சென்றார்

Spread the love

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 17 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. சூலூரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

இந்த சம்பவங்களெல்லாம் விஜய்க்கு தெரியுமா?

இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காமல், முதல்வர் தினமும் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு வீட்டிற்குச் செல்கிறார். இதில் மதியம் டிபன் பாக்ஸ் கொண்டு வந்து சாப்பிடுகிறார் எனப் பெருமையாகப் பேசுகிறார்கள்.

அவர் சந்திப்பது சினிமா பிரபங்களை மட்டுமே. கரூரில் 10 ரூபாய் பாடலுக்கு நடனமாடிய விஜய் தற்போது நடனமாடத் தயாரா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *