நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 17 வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. சூலூரில் 10 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்களெல்லாம் விஜய்க்கு தெரியுமா?
இதைப்பற்றியெல்லாம் வாய் திறக்காமல், முதல்வர் தினமும் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். மாலை 5 மணிக்கு வீட்டிற்குச் செல்கிறார். இதில் மதியம் டிபன் பாக்ஸ் கொண்டு வந்து சாப்பிடுகிறார் எனப் பெருமையாகப் பேசுகிறார்கள்.
அவர் சந்திப்பது சினிமா பிரபங்களை மட்டுமே. கரூரில் 10 ரூபாய் பாடலுக்கு நடனமாடிய விஜய் தற்போது நடனமாடத் தயாரா?