News
oi-Vignesh Selvaraj
டெல்லி: வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ள ‘ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா 2026’ தொடக்க நிகழ்விற்கான அழைப்பிதழை, டெல்லி முதல்வர் ரேகா குப்தாடம் பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான விந்து தாரா சிங் வழங்கி அழைப்பு விடுத்துள்ளார்.
ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா (Film Expo India) என்பது, திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் அனைத்துப் பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த “திரைக்கதையாக்கம் தொடங்கி திரையிடல் முதல் வெளியீடு வரை” வர்த்தகக் கண்காட்சியாகும்.

திரை எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஸ்டூடியோக்கள், ஓடிடி தளங்கள், விநியோகஸ்தர்கள், திரை வெளியீட்டாளர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இணைப்பதன் மூலம், டெல்லி மற்றும் வட இந்தியப் பகுதி முழுவதும் திரைப்படத் தயாரிப்பிற்கான ஒரு வலுவான சூழலை உருவாக்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
டெல்லி பாரத் மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்க உள்ள ‘ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா 2026’ நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களும் பிரபலங்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தக் கண்காட்சி தொடர்புகளை ஏற்படுத்தவும், கூட்டாக இயங்குவதிலும், முதலீடு, புதுமைகளைப் புகுத்துவதிலும் மற்றும் திறமை மேம்பாட்டிற்கான ஒரு மைல்கல் தளமாக விளங்கும்.
திரைப்படத் தயாரிப்பு, படைப்பாற்றல் தொழில் மற்றும் இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான ஒரு முன்னணி தளமாக டெல்லியை நிலைநிறுத்த ஃபிலிம் எக்ஸ்போ இந்தியா விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.