Business
oi-Vigneshkumar
மும்பை: நம்மில் பலரும் டிவிடெண்ட்காகவே பல பங்குகளில் முதலீடு செய்வார்கள். அதன்படி அடுத்த வாரம் எந்தெந்த பங்குகளுக்கு டிவிடெண்ட் கிடைக்கும்.. அவ்வளவு டிவிடெண்ட் தொகை கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம். இந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி தொடங்கி ஹூண்டாய் மோட்டர், பெர்ஜர் பெயிண்ட்ஸ் வரை பல முக்கிய நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்குகிறது.
இந்தியாவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்களும் இளம் தலைமுறையினரும் தான் பங்குச்சந்தைகளில் அதிகம் முதலீடு செய்கிறார்கள். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும் போது பங்குச்சந்தைகள் நமக்கு மிக பெரிய ஒரு லாபத்தை கொடுக்கிறது.

பங்குச்சந்தைகள்
இன்னும் சிலர் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கவும் கூட பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். அப்படி குறுகிய காலத்தில் பங்குச்சந்தைகளில் பங்கம் வருவோர் பெரும்பாலும் டிவிடெண்ட்டாகவே முதலீடு செய்கிறார்கள். இதுபோல டிவிடெண்ட்காக முதலீடு செய்வோருக்கு அடுத்த சில நாட்கள் ரொம்பவே முக்கியமானது. ஏனென்றால் பல முக்கிய நிறுவனங்கள் டிவிடெண்ட் தொகையை அறிவிக்கவுள்ளன.
ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 5 வரை ஐசிஐசிஐ வங்கி, கோஃபோர்ஜ், போஷ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா, பெர்ஜர் பெயிண்ட்ஸ், பிரிகேட் என்டர்பிரைசஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் டிவிடெண்ட் வழங்குகின்றன. இதனுடன், எம்பஸி ஆபீஸ் பார்க்ஸ் நிறுவனமும் REIT முதலீட்டாளர்களுக்கும் லாபத்தை பிரித்து வழங்க உள்ளது. தேதி வாரியாக இது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்!
ஆகஸ்ட் 3- திங்கள்
ஆகஸ்ட் 3ம் தேதி பல நிறுவனங்கள் எக்ஸ்-டிவிடெண்ட் ஆகின்றன. அதிகபட்சமாக ஐசிசி வங்கி, ஒரு பங்குக்கு ரூ.12 டிவிடெண்ட் தருகிறது. அதேபோல லக்ஷ்மி இன்ஜினியரிங் மற்றும் வேர் ஹவுஸ் 10 ரூபாய், கோஃபோர்ஜ் இடைக்கால ரூ.4 டிவிடெண்ட்டாக தருகிறது. மேலும், டிரான்ஸ்ரெயில் லைட்ஸ் இடைக்கால டிவிடெண்ட்டாக ரூ.3, பிரைமா பிளாஸ்டிக் ரூ.2 வழங்குகிறது. இது தவிர சாய் சில்க்ஸ், கசாஞ்சி ஜூவல்லர்ஸ், எம்கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ், கான்பூர் பிளாஸ்டிபேக், ககடியா சிமெண்ட், பன்னாரி அம்மன் ஸ்பின்னிங் மில்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் டிவிடெண்ட் வழங்குகிறது.
ஆகஸ்ட் 4 – செவ்வாய்
போஷ் நிறுவனம் ஒரு பங்குக்கு அதிகபட்சமாக ரூ.270 வழங்குகிறது. இருப்பினும், போஷ் நிறுவனத்தின் ஒரு பங்கே இப்போது சுமார் ரூ.41,000க்கு வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது. இது தவிர TCPL பேக்கேஜிங் ரூ.25, பிசிபிஎல் கெமிக்கல் இடைக்கால டிவிடெண்ட்டாக ரூ.4.50 தருகிறது. பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் இடைக்கால டிவிடெண்ட்டாக ரூ.4, மேப்மை இந்தியா ரூ.3.5 டிவிடெண்ட் வழங்குகிறது. மேலும், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, எவரெடி ரூ.2.50, அலெம்பிக், மைசூர் பெட்ரோ கெமிக்கல்ஸ், ஹிந்த் ரெக்டிஃபையர்கள், கிரீன்பிளை இண்டஸ்ட்ரீஸ், ஆந்திரா பேப்பர்ஸ் ரூ.0.50 டிவிடெண்ட் வழங்குகிறது.
அதேபோல Embassy Office Parks REIT ஆகஸ்ட் 4ம் தேதி டிஸ்ட்ரிபியூஷன் தேதியை எட்டுகிறது. அதன்படி முதலீட்டாளர்களுக்கு வருமான பகிர்வு வழங்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 5 – புதன்கிழமை
ஆகஸ்ட் 5ம் தேதி பல நிறுவனங்கள் கணிசமான தொகையை டிவிடெண்ட்டாக தருகிறது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா ரூ.21, அஜந்தா பார்மா, ஆட்டோமோட்டிவ் அக்ஸைல் தலா ரூ.32 டிவிடெண்ட் தருகிறதது. இது தவிர குட்இயர் இந்தியா ரூ.26.50, காந்தி ஸ்பெஷல் ட்யூப்ஸ் ரூ.15 டிவிடெண்ட் தருகிறது. மேலும், வேதாந்தா அலுமினிய இடைக்கால டிவிடெண்ட்டாக ரூ.8 தருகிறது. மேட்டரிமோனி, முஞ்சல் ஷோவா, பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா, ஃபெர்மென்டா பயோடெக், பிரிகேட் எண்டர்பிரைசஸ், சோமனி செராமிக்ஸ், டிடி பவர் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டிவிடெண்ட் தருகிறது.
ஒரு நிறுவனத்தின் டிவிடெண்டை பெற வேண்டும் என்றால்.. அந்த நிறுவனத்தின் பங்குகளை எக்ஸ்-டிவிடெண்ட் தேதிக்கு முன்பே வாங்கியிருக்க வேண்டும். எக்ஸ்-டிவிடெண்ட் தேதியன்று அல்லது அதற்கு பிறகு பங்குகளை வாங்குபவர்களுக்கு அந்த டிவிடெண்ட் கிடைக்காது. எனவே, டிவிடெண்டை எதிர்பார்த்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் இந்த தேதிகளை கவனமாக நோட் செய்ய வேண்டியது அவசியம்.


