அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு: மாணிக்கம் தாகூர், எஸ்.வி.சேகர் அட்டாக் – Kumudam

Spread the love

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளபதிவில்,  2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா? அமித் ஷாவின் அனுமதியுடன்,

மோடியின் ஆசீர்வாதத்துடன், BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி. பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது. இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள். முகமூடி மாறலாம். ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம். Plan B is ready for Tamilnadu. RSS behind it . Beware of them . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதே போன்று சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேர்மையில்லாதவர். விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அவர் வாயைத் திறந்தாலே பொய் தான் பேசுவார். அதிமுகவின் வாக்குகளை பாஜக பெற்ற சமயத்தில், தன் தனிப்பட்ட செல்வாக்கால் தான் வாக்குகள் அதிகரித்தது என்று பொய் கூறி வருகிறார். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *