தனது மனைவி மகனை தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும்; மனைவி இங்கு வர வேண்டும் என கூறியபடி அடுத்தடுத்த தளங்களுக்கு குழாயில் தொங்கியபடி ஏறினார்.
இதனை பார்த்த பொதுமக்கள் திடீர்நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத்துறையினரை வரவழைத்தனர்.
இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கீழே இறங்குமாறு கெஞ்சியும், பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறங்க மறுத்து, `தனது மனைவி அவனியாபுரத்தில் உள்ளார்.
அவரை அழைத்துவர வேண்டும். இல்லையென்றால் குதித்துவிடுவேன்’ என தொடர்ந்து கூறியபடியே தொங்கியதோடு ஜன்னலில் உள்ள கண்ணாடிகளை உடைத்து அதை வைத்து உடலை கிழித்துகொண்டு காயப்படுத்தியபடி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மனைவி எங்கு உள்ளார் என காவல்துறையினர் கேட்ட போது அவனியாபுரத்துல ‘பாண்டிகடல்னு பொண்டாட்டினு சொன்னா தெரியும் இங்கு கூப்டு வாங்க’ என கூறி காவல்துறையினர், தீயணைப்புத்துறையினரின் பொறுமையை சோதித்து பார்த்தார்.