‘அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்!’ – என்ன சொல்கிறார் அமைச்சர் வன்னி அரசு? |“We Urged Stalin Not to Evict Parandur for Adani!” – What Does Minister Vanniarasu Say?

Spread the love

பரந்தூருக்குள் யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாது. சொந்த ஊருக்குள் நுழைய அந்த மக்களிடம் காவல்துறை ஆதார் கார்டு கேட்டது. அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க செல்கையில் எங்களையே விடமாட்டார்கள். நாங்களே டூவிலரில்தான் செல்வோம். வளர்ச்சி என்ற பெயரில் மக்களை விரட்டியடிப்பதுதான் வளர்ச்சியா? நம்முடைய மக்களை சொந்த ஊரிலேயே அகதி ஆக்கிவிட்டு, வெளிமாநிலத்துக்காரர் யாருக்கோ விமான நிலையத்தை கொடுப்பது தரகு வேலைதானே?

வன்னி அரசு

வன்னி அரசு

இதை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே கூறினோம். அதானிக்காக நம் மக்களை ஏன் விரட்ட வேண்டும்? அவருக்காக கால்வாய், ஏரிகள் என நீர் நிலைகள் நிறைந்த பரந்தூரை ஏன் காலி செய்ய வேண்டும்? எனக் கேட்டோம். அவர்களுடன் கூட்டணியில் இருந்த போதிலும் எங்களுக்கு மக்களின் நலனே முக்கியமாகப்பட்டது. பரந்தூரில் விமானம் நிலையம் இல்லாமல் போனால் தமிழ்நாடு வளர்ச்சியே பெறாது என்பது பாஜகவின் நரேட்டிவ். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கின்றனர். தேசப்பற்று, வளர்ச்சி என்பதற்கு எதிராக பேசினால் நக்சல் என முத்திரை குத்துகிறார்கள். திமுகவும் முன்பிருந்தே இந்தத் திட்டத்தில் உறுதியாக இருந்தது. அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். ஆனால், இப்போதைய முதல்வர் மக்களின் எண்ணங்களை உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறார்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *