“உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது” – விசிக திருமாவளவன் | “One cannot ask why all the promises were not fulfilled immediately,” said VCK’s Thirumavalavan.

Spread the love

தற்போது பரந்தூர் திட்டத்தை முழுமையாகக் கைவிட்டு, புதிய விமான நிலையத்திற்கான வேறு இடத்தை தேர்வு செய்வோம் என்ற உறுதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், புதிய இடத்தை தேர்வு செய்யும்போது சட்டப்படி அங்குள்ள மக்களின் கருத்தறிந்து அவர்களின் இசைவைப் பெற வேண்டியது மிக முக்கியமாகும். விமான நிலையம், துறைமுகம், ரயில்வே போன்ற எந்தவொரு பெருந்திட்டத்தைக் கொண்டு வந்தாலும், நிலங்களைக் கையகப்படுத்தும் போது நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படாதவாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடாகும்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

புதிய அரசு பொறுப்பேற்று 100 நாள்களே ஆகியுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எந்தவொரு புதிய அரசும் தனது திட்டங்களையும் வாக்குறுதிகளையும் முழுமையாகச் செயல்படுத்தக் குறைந்தபட்ச காலமாவது தேவைப்படும் என்பதால், உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை என்று விவாதிக்க முடியாது. ஆளுங்கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, அது தொடர்பாக, பொதுவெளியில் விமர்சிப்பதை விட அரசின் கவனத்திற்கு உரிய முறையில் கோரிக்கைகளைக் கொண்டு சென்று, வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தும் கடமையை தொடர்ந்து செய்து வருகிறது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *