அதேபோல, “சொல்லி அடிக்கிற மாதிரி’ நான் தஞ்சாவூர் போய்ச் சேர்வதற்குள், நீதிமன்றம் மூலமாக என்னோட கைது நடவடிக்கையை ரத்து செய்ய வைத்ததும் நீங்கள்தான்.
இதில் ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால்… ஆளுங்கட்சியே கோர்ட்டுக்குப் போய், “எதிர்க்கட்சித் தலைவரைப் போய் கைது பண்ற ஐடியா எல்லாம் எங்களுக்கு இல்லைங்க… சும்மா விசாரித்துவிட்டு விட்டுவிடுவோம்”னு சொன்னார்கள்.
அதற்கு நான், “ஏங்க, நேத்து நைட்டுதான் நான் தஞ்சாவூர்ல இருந்து வந்தேன். கைது பண்ணப் போறோம்னு முன்னாடியே சொல்லியிருந்தால் நான் அங்கேயே தங்கியிருப்பேனே. எனக்கு இன்னைக்கு இரண்டு மீட்டிங் வேற இருந்தது, அதையும் கெடுத்துட்டீங்க”னு சொன்னேன்.

இப்படி அரசாங்கத்திற்கு எந்தச் செலவும் இல்லாமல், மக்களோட வரிப் பணத்துல நாம் ஒரு பிரமாண்டமான ரோட் ஷோ நடத்தி முடித்திருக்கிறோம். அதற்காக நாம் இந்த அரசுக்கு ஒரு நன்றியைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தேர்தலுக்கு அப்புறம் கொஞ்சம் சோர்ந்து போயிருந்த நம்ம உடன்பிறப்புகள், இந்த ‘டம்மி அரசு’ பண்ணின வேலையால, அவர்களின் தயவால மறுபடியும் பழைய ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
டம்மி முதலமைச்சர், கேடுகெட்ட அரசு, எதற்கும் தைரியம் இல்லை, விவசாயிகளை நடுரோட்டில் விட்டுவிட்டீர்கள் என விமர்சனம் செஞ்சேன். இதற்குத்தான் கைது செய்ய வந்திருக்காங்கனு என நினைச்சேன்.
ஆனால் அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காம, காவிரியில் தண்ணீர் வர வேண்டும் எனச் சொன்னதுக்காக கைது செய்யப்பட்டேன்,” எனப் பேசியிருக்கிறார்.