த.வெ.க தரப்பில் சோஃபா செல்கிறது. அதன்பிறகு முதல்வரும் செல்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘புஷ்பா’ படத்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், ” எங்கள் அலுவலகத்திற்கு சோஃபா வந்தது ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று.

அந்த நேரத்தில் நீங்கள் கேமராவை எடுத்துக்கொண்டு உள்ளே வந்துவிட்டீர்கள். அவர் விசிகவை பற்றி சொல்லவில்லை. அதிமுகவில் உள்ள ஒரு அணியினரை சந்திக்க போகும்போது நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன்” என கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ” கடந்த அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களை இந்த அரசும் இடை நிறுத்தாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்கிற உறுதியை அளித்திருக்கிறார்.
மகளிர் உதவித்தொகை வரவு சற்று தள்ளிவைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றாலும் அது வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருப்பதால் கட்டாயம் அது நடைமுறைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நடைமுறைப்படுத்துவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

தவிர “த.வெ.கவுடன் பேரம் பேசுவதற்காகத் தான் விசிக காலம் தாழ்த்தியது என்று விமர்சித்தார்கள். முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.