ஈரானிடம் இரண்டு ஆண்டுகள் பிளான்
ஈரானியப் பொருளாதார அமைச்சர் அலி மதானிசாதே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கொடுத்த பேட்டியில், “இந்த நாள்களுக்காக நாங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தோம்.
அவர்களின் திட்டங்கள் என்ன என்பது எங்களுக்குத் தெரிந்தே இருந்தது.
அரசாங்கத்திடம் இதற்கான இரண்டு ஆண்டு காலத் பிளான் இருக்கிறது. இந்த நிகழ்விற்கு ஈரான் அரசாங்கம் முற்றிலும் தயார் நிலையிலேயே இருக்கிறது.
ஒருதுருவ உலகத்தின் (Unipolar world) காலம் முடிந்துவிட்டது. அதை அவர்கள் மீண்டும் ஒருமுறை உணர்வார்கள்.
அவர்கள் எதிலும் சற்றும் வெற்றி பெற முடியாது என்பதை அவர்களே காண்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். ஆக, ஈரான் அமெரிக்காவின் தடைகளுக்குத் தயாராகவே உள்ளது போலும்.!