“நமது பாதுகாப்புத் தற்காப்புக் கோட்பாடு மிகத் தெளிவானது: கண்ணுக்குக் கண்!
நமது உள்கட்டமைப்புகள் உட்பட ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், சக்திவாய்ந்த மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்க எங்களைக் கட்டாயப்படுத்தும்.
அத்தகைய தாக்குதல்களுக்கு எந்த வகையான ஆதரவை வழங்கினாலும், அதில் பங்கு வகிக்கும் எவரும் நமது தாக்குதலுக்குரிய நியாயமான இலக்குகளாகவே கருதப்படுவர்.”

இந்த இரு பதிவுகள் மூலம் ஈரான் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்று எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
ஒன்று, ஈரான் எண்ணெய் விற்பனையை யாரும் தடுக்கக் கூடாது.
இரண்டாவது, ஹார்முஸ் நீர்ச்சந்தியில் இருந்து அமெரிக்கா விலக வேண்டும்.
மூன்றாவது, ஈரான் மீது யார் தாக்குதல் நடத்தினாலும், திரும்பத் தாக்குதல் நடத்தப்படும்.