International
oi-Mani Singh S
தெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டு வரை எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில் ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனியின் இந்த கடிதம் உலக நாடுகளை கவனிக்க வைத்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்கா போர் தொடுத்தது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை முடக்கிய ஈரான், வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவுக்கு எதிராக
ஈரான் – அமெரிக்கா போர் 6 மாதங்களை தாண்டியும் நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. ஈரான் – அமெரிக்கா இடையே நீடித்து வரும் போரால் உலக அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு இருக்க கூடிய சூழலில் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த சூழலில், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அந்த நாட்டின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி நியமனம் செய்யப்பட்டார்.
இஸ்லாமிய நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்
உச்ச தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை மொஜ்தபா பொதுவெளியில் தலைகாட்டவில்லை. அவருடைய வீடியோவோ அல்லது ஆடியோவோ எதுவும் வெளியாகவில்லை. மொஜ்பதா கமேனி படுகாயம் அடைந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இன்னொரு பக்கம் அவர் உயிருடன் உள்ளாரா? என்ற விவாதமும் ஏற்பட்டது. ஆனால், கமேனி உயிருடன் தான் இருக்கிறார் என்று, தான் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கூறியிருந்தார்.
இந்த சூழலில்தான், மொஜ்தபா கமேனியிடம் இருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு கடிதம் பறந்ந்துள்ளது. இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடிய நாளான இன்று, மொஜ்தபா கமேனி இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்ர். கடிதத்தில், “இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது, ஒற்றுமை, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதே ஆகும்.
உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு
முஸ்லிம்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையிலோ, முஸ்லிம் சமூகத்துக்குள் மோதலை உருவாக்கும் வகையிலோ, தெரிந்தோ தெரியாமலோ, வேண்டுமென்றோ வேண்டாமென்றோ எந்தப் பதவியில் இருக்கும் ஒருவர் செயல்பட்டாலும், அவர் இஸ்லாமின் எதிரிகளின் நோக்கத்தை நிறைவேற்றியவராகவே கருதப்படுவார்.
பிரந்தியத்தில் உள்ள நாடுகளின் ஆட்சியாளர்கள் உங்களின் உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டுகொள்வதோடு, அவர்களின் திட்டத்தை புரிந்து கொண்டு அதை எதிர்க்க வேண்டும்” என்றும் கமேனி கூறியுள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அமெரிக்கா இடையேயான மோதலின் போது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது.


