போர்… போர் நிறுத்தம்… புரிந்துணர்வு ஒப்பந்தம்… போர் நிறுத்தம்… போர்… மூன்று நாள்களுக்கு போர் நிறுத்தம்… மீண்டும் போர் – இது தான் கடந்த 155 நாள்களாக ஈரான் – அமெரிக்கா போரில் நடந்து வரும் சம்பவங்கள்.
கடந்த 24-ம் தேதி முதல் இரு நாடுகளும் சத்தமில்லாமல் போர் நிறுத்தத்தில் இருந்தன. ஆனால், அமெரிக்காவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜூலை 28-ம் தேதி செல்ல, மீண்டும் தாக்குதலை தொடங்கியது ஈரான்.
இதற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்காவும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
நேற்று ட்ரம்ப், “ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். ஒரு கட்டத்தில் அவர்கள், “எங்களால் இதற்கு மேல் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது’ என்று கதறும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்” என்று பேசியிருந்தார்.

“இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகம் இதுவரை கண்டிராத அளவிலான ராணுவப் பலத்தோடும், அதிகாரத்தோடும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகத் தாக்க தயாராக, முழு வீச்சில் அமெரிக்கா தயாராக இருக்கிறது.