அயோத்தி ராமர் கோவில் நிதி மோசடிப் புகார்: உள்கட்சிப் பூசல்; பாஜக அரசுக்கு நெருக்கடி | Allegations of financial fraud at the Ayodhya Ram Temple: Internal infighting; pressure on the BJP government.

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா கோவில், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அந்தக் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் கோவில் உண்டியல் காணிக்கை பணம் மற்றும் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள், மத்தியில் ஆளும் பா.ஜ.க மற்றும் உத்தரப் பிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில்

இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ள நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோர் பொதுவெளியில் வெளியிட்டுள்ள முற்றிலும் மாறுபட்ட கருத்துகள், ஆளுங்கூட்டணிக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசலையும், நிர்வாகப் பிளவையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது என்கிறார்கள்.

ராமர் கோவில் கட்டுமானக் குழுவின் தலைவரும், பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான நிருபேந்திர மிஸ்ரா, சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி நேர்காணல்களில், கோவிலில் கடுமையான பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *