அதைத் தொடர்ந்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பவன் கெரா முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் `வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகவும், அவர் காட்டிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை அறிய போலீஸ் விசாரணை தேவை’ எனக் கூறி முன்ஜாமீன் வழங்க மறுத்தது.
அதைத் தொடர்ந்து பவன்கேரா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பவன் கேரா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “பவன் கெரா ஒன்றும் கொடூரமான குற்றவாளி அல்ல. அவதூறு வழக்குகளில் கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, “பவன் கெரா காட்டிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களின் பின்னணி குறித்து விசாரிக்க அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்.” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் முடிவு, பவன் கெரா கைது செய்யப்படுவாரா அல்லது அவருக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.