ராஜா, அட்சயா விவகாரம் கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து பேசு பொருளானது. இந்த சூழலில் அட்சயா தன் கணவன் ராஜா குறித்து பேசி நேற்று வெளியிட்ட வீடியோவும் வைரலானது. அதில், ஷோஷியல் மீடியாவில் பரவும் வீடியோ எதுவும் இப்ப எடுத்தது கிடையாது. 2025 ஏப்ரல் மாதம் எடுத்தது. இந்த வீடியோவை தப்பா யூஸ் பண்ணக் கூடாது, ஷோஷியல் மீடியாவில் போடக் கூடாது என்று போலீஸ் தரப்பில் தெரிவித்திருந்தனர். நான் வேலைக்கு செல்லக் கூடாது என்பதற்காக நான் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு வந்து பிரச்னை செய்தார். எனக்கு மொட்டை அடித்தார். அந்த புகாரில் கூட இந்த வீடியோவை காட்டி அனுதாபத்தை தேடி அவர் பக்கம் நியாயம் இருப்பது போல் காட்டினார். நான் ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ் போட்டிருந்தேன் இல்லைனு சொல்லலை. பழைய வீடியோவை தப்பா யூஸ் பண்ணியிருக்கார்.
அவர் மீது திருட்டு வழக்கு உள்ளது. கஞ்சா பழக்கம் உள்ளது. தவறான பழக்கத்தால் அடிக்கடி சைக்கோ மாதிரி நடந்து கொள்வார். அந்த நேரத்தில் யாரும் அவரை கன்ட்ரோல் பண்ண முடியாது. எங்களை பயங்கரமா அடிப்பார். சிகரெட்டால் சூடு வச்சி கொடுமை படுத்தியிருக்கார். அதனால் தான் ஒரு வருடமாக நான் பிரிஞ்சி இருந்தேன். சேர்ந்து வாழ்வதற்காக பட்டுக்கோட்டையில் வீடு எடுத்தேன். ஆனால் ஜூன் 3ம் தேதி வீட்டுக்கு வந்து என்னை வெட்டி விட்டு அனுதாபம் தேடுற மாதிரி வீடியோ போட்டார். அவர் ஒரு குற்றவாளி, ட்ரக் அடிக்ட், எங்களை கொடுமை படுத்துவார்.