India
oi-Vigneshkumar
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திடீரென சட்டசபை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே போட்டி தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கிடையே இன்று அங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் சூழலில், அங்கு சட்டசபையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சூழலில் தான் ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போலீஸ் தடுப்புகளை மீறி ஜார்க்கண்ட் சட்டசபை வளாகத்தில் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். ஜார்க்கண்ட்டில் சட்டசபை நடந்து வரும் சூழலில், போராட்டக்காரர்கள் சட்டசபை வளாகத்தில் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.