ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தனி தொகுதியில் த.வெ.க வேட்பாளர் தமிழ்செல்வி 4,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ பண்ணாரி மற்றும் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பி.எல். சுந்தரம் ஆகியோரை வீழ்த்தியிருக்கிறார். முதல் தேர்தலிலேயே இரண்டு சீனியர் வேட்பாளர்களை வீழ்த்தி கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

யார் இந்த தமிழ்செல்வி?
சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வி முதுகலை பட்டம் பெற்றவர். விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். தமிழ் பியூட்டி சலூன் என்கிற பெயரில் அழகு நிலையம் ஒன்றை சத்தியமங்கலத்தில் நடத்தி வருகிறார்.
தொடர்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் நெருங்கிய உறவினராவார். மக்களுக்கான நீதிப் போராட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இவரின் தந்தை அந்தியூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.
முன்னாள் எம்.எல்.ஏ மகள் என்பதால் அரசியல் ஆர்வம் காரணத்தால் த.வெ.க- வில் இணைத்துக் கொண்டு இன்று எம்.எல்.ஏ- வாக உயர்ந்திருக்கிறார்.