ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar’s Daughter During Online Game-

Spread the love

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார்.

மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், “‘எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார். பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

இது குறித்து எங்களது மகள் உடனே எனது மனைவியிடம் வந்து தெரிவித்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வார விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தவேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் கேட்டுக்கொண்டார். அக்‌ஷய் குமாருக்கு 13 வயதில் ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். அக்‌ஷய் குமார் தெரிவித்த தகவல் குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் அக்‌ஷய் குமார் இக்குற்றச்சாட்டைத் தெரிவித்த நிலையில் தற்போது அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு ஏதாவது பெண்களிடம் இது போன்று நிர்வாண படங்களைக் கேட்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். டிஜிட்டல் கைது, பங்கு வர்த்தகம் எனப் பல்வேறு வழிகளில் ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *