டி20 கிரிக்கெட்டில் சில நாள்கள் இப்படித்தான் நடக்கும், நீங்கள் ஒரு நல்ல ஷாட் அடிப்பீர்கள், அது நேராக ஃபீல்டர் கைக்கே செல்லும். சில நேரங்களில் அதே ஷாட் சிக்ஸராகவோ பவுண்டரியாகவோ மாறும்.
நான் மனதளவில் தெளிவாக இருக்கிறேன் இதற்கு என் மனைவி, சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை எப்போதும் பாஸிட்டிவாக வைத்துக்கொள்கிறார்கள்.

வீரர்கள் அனைவரும் திட்டங்களை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறுகள் நிச்சயம் நடக்கும். ஆனால் ரசிகர்களுக்காகவும், இந்தச் சிஎஸ்கே ஜெர்ஸிக்காகவும் நாம் அனைத்தையும் கொடுக்க வேண்டும்” என்று கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.