ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மட்டுமல்ல… பின்னர், மொரோக்கோ, சூடான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் இணைந்தன.
இதில் பிற மத்திய கிழக்கு நாடுகளும் இணைய வேண்டும் என்று கருதுகிறார் ட்ரம்ப்.
போர் நிறுத்தத்திற்கு ஈரானின் மிக முக்கிய நிபந்தனை – ஈரான், லெபனான் மீதான பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஆபிரகாம் உடன்படிக்கையில் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளும் கையெழுத்திட்டு விட்டால், ஈரான் மீது அந்த நாடுகள் தாக்குதல்களைத் தொடுக்காது.
இதில் ட்ரம்ப் எப்படியோ ஈரானின் நிபந்தனையை செட்டில் செய்துவிடுவார்.

இன்னொரு பக்கம், சவூதி அரேபியாவை ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைக்க அமெரிக்கா முன்பிருந்தே முனைப்பாக உள்ளது. ஆனால், பாலஸ்தீனத்திற்கு சவுதி அரேபியாவின் ஆதரவு உள்ளதால், அது இந்த உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை.
ஒருவேளை, இப்போது ஆபிரகாம் உடன்படிக்கையில் சவூதி அரேபியா இணைந்துவிட்டால், அவர்களது நீண்ட கால முயற்சி கைக்கூடிவிடும்.
ட்ரம்ப் பட்டியலிட்டிருக்கும் எந்த நாடும் இதுவரை எதுவும் கூறாத நிலையில், பாகிஸ்தான் மட்டும் ட்ரம்பின் அறிவிப்பை ஓபனாக மறுத்துவிட்டது. இதற்கும் பாலஸ்தீன ஆதரவு தான் மிக முக்கிய காரணம்.