“ஆர்எஸ்எஸ் பிள்ளை என்று விஜய்யைச் சொன்னார். ஆனால் இன்று அவர்களோடு” – திருமா குறித்து தமிழிசை| bjp tamilisai soundararajan about vck and manikam tagore

Spread the love

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தூத்துக்குடியில் இன்று (மே. 25) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

விசிக குறித்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., மாணிக்கம் தாகூர் குறித்தும் பேசிய தமிழிசை சௌந்தராஜன், “விசிக, திமுக, கம்யூனிஸ்டுகள் எல்லோரும் அவர்கள் கையை வைத்தே குத்திக்கொள்கிறார்கள்.

விசிக, பாஜகவை இணைத்து, இணைத்து பேசித்தான் அரசியல் செய்தார்கள். திருமா விஜய்யை கொள்கை எதிரி என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்.

சமூக நீதிஅமைச்சராக வன்னியரசு

சமூக நீதிஅமைச்சராக வன்னியரசு

ஆர்எஸ்எஸ் பிள்ளை என்று விஜய்யைச் சொன்னார். ஆனால் இன்று அவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறீர்கள்.

அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்களுக்கே அரசவையில் பங்கு கொண்டது பிடிக்கவில்லை. அதுவும் திருமாவளவனே சொல்கிறார் எனக்கே பிடிக்கவில்லை என்று… அப்படி ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லை என்றால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க வேண்டியது தானே…

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *