இந்திய அணியில் இருந்து நீக்கம்.. மைதானத்திலேயே கண்ணீர்விட்ட வைபவ் சூர்யவன்ஷி.. ஆறுதல் சொன்ன ஷெட்கே! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi is crying in the stadium after dropped from the Indian team against England

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

சவுதாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டார். இந்த தகவல் மைதானத்தில் வைபவ் சூர்யவன்ஷிக்கு சொல்லப்பட்ட பின், அவர் ஒரு இருக்கையில் அமர்ந்து கண்ணீர்விட்ட வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. வாஷிங்டன் சுந்தர் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யன்ஷ் ஷெட்கே சேர்க்கப்பட்டனர். வைபவ் சூர்யவன்ஷி பெஞ்ச் செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Vaibhav Sooryavanshi

ஏனென்றால் வைபவ் சூர்யவன்ஷி 3 போட்டிகள் மட்டுமே ஆடி இருக்கிறார். அவருக்கு தொடர்ச்சியாக இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கவும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனாலும் வைபவ் சூர்யவன்ஷியை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் நீக்கி இருக்கின்றனர்.

இந்திய அணியின் பிளேயிங் லெவன் மைதானத்திற்கு வந்த பின்னரே தெரிவிக்கப்பட்டது. அப்போது வைபவ் சூர்யவன்ஷி பெஞ்ச் செய்யப்படுவதாக கூறப்பட்ட பின், அவர் ஓரமாக சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வைபவ் சூர்யவன்ஷி கண்ணீர்விட்டு அழுக தொடங்கிவிட்டார்.

இதனை அருகில் நின்றிருந்த சூர்யன்ஷ் ஷெட்கே கவனித்தார். உடனடியாக வைபவ் சூர்யவன்ஷி அருகில் வந்து தோளில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. அவர் ஆடிய 3 போட்டிகளிலும் பெரியளவில் ரன்கள் சேர்க்கவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்து 42 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

அவரிடம் இருக்கும் ஷார்ட் பால் வீக்னஸை ஆர்ச்சர் எளிதாக கண்டுபிடித்து விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியை கூடுதலாக நேரம் எடுத்து தயார்ப்படுத்த வேண்டிய தேவை இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *