International
oi-Mani Singh S
ஜகார்த்தா:
பிரதமர் மோடி 6 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு திங்கட்கிழமை புறப்பட்டு சென்றார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக இந்தோனோசியாவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். தனி விமானத்தில் இந்தோனோஷியா புறப்பட்ட பிரதமர் மோடியை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

2 போர் விமானங்கள் பாதுகாப்புடன் சென்ற மோடி
இந்தோனேஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடியின் விமானம், அந்த நாட்டு வான் எல்லைக்குள் நுழைந்ததும் போர் விமானங்கள் பாதுகாப்புக்காக வந்தன. எஃப் 16 மற்றும் சுகோய் 30 ஆகிய இரண்டு போர் விமானங்கள் பிரதமர் மோடியின் விமானத்திற்கு வரவேற்பு அளிக்கும் விதமாக பாதுகாப்புடன் அழைத்து சென்றன. இந்த வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
எஃப் 16 விமானம் அமெரிக்காவுக்கு சொந்தமானது ஆகும். பல தசாப்தங்களாக சேவையில் உள்ள இந்த விமானம், பல்வேறு நாடுகளும் தங்கள் பாதுகாப்பிற்காக வாங்கி விமானப்படையில் இணைத்துள்ளன. அதேபோல, சுகோய் 30 விமானம் ரஷ்யா நாட்டின் தயாரிப்பு ஆகும். இரண்டு இருக்கைகள், இரண்டு என்ஜின்கள் கொண்ட இந்த சுகோய் போர் விமானம் பனிப்போர் கால கட்டத்தில் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கின. இந்தியாவிடமும் சுகோய் 30 எம்கேஐ ரக விமானங்கள் உள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றபடி மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியண்டா நேரில் வந்து வரவேற்பு கொடுத்தார். இதையடுத்து மோடிக்கு அந்நட்டு மரபுப்படி வரவேற்பும் அளிக்கப்பட்டது. கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்தோனேஷியா சென்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
Landed in Jakarta. I’m touched by President Prabowo Subianto’s gesture of welcoming me at the airport.
In 2018 we elevated our relations to a Comprehensive Strategic Partnership, which has benefitted our people.
During this visit, President Prabowo Subianto and I will hold… pic.twitter.com/rG61TGGDdY
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
ஜகார்த்தா விமான நிலையம் சென்றடைந்தேன். விமான நிலையத்தில் அதிபர் பிரபோவ் சுபியாண்டா என்னை வரவேற்றார். இது என்னை நெகிழ்ச்சி அடைய வைத்தது. இந்த பயணத்தின் போது இருநாட்டு உறவுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பல்வேறு ஆலோசனைகளை நடத்த உள்ளோம். இந்தோனேஷியாவில் இந்திய வம்சாவளியினருடன் ஆலோசனை நடத்துவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.