இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது.. மம்தா பானர்ஜி கட்சிக்கு புதிய பெயர் – சின்னம் ஒதுக்கீடு | Mamata Banerjee faction gets football player symbol and function as a ‘Mamata All India Trinamool Congress’

Spread the love

India

oi-Nantha Kumar R

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வரும் 6ம் தேதி அம்மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தலுக்காக மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் அரூப் ராய் தலைமையிலான அணிக்கு தனித்தனியாக பெயர், சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

mamata-banerjee-faction-gets-football-player-symbol-and-function-as-a-mamata-all-india-trinamool-co

அதன்படி முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி அணி வரும் இடைத்தேர்தலில் ‘மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் போட்டியிட உள்ளது. இவர்களுக்கு கால்பந்து விளையாடும் வீரர் என்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மம்தா பானர்ஜியின் அதிருப்தி அணி அரூப் ராய் என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த அணி ‘டெமாக்கிரட்டிக் திரிணாமுல் காங்கிரஸ்’ என்ற பெயரில் களமிறங்க உள்ளது. இந்த அணியின் வேட்பாளர்களுக்கு ‘கடிதம்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *