International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், புதின் பயன்படுத்தும் ‘டூம்ஸ்டே’ விமானத்தை ரஷ்யா ஈரானுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இது அமெரிக்காவுக்கான வலுவான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
வானத்தில் இருந்தபடியே, தரையில் இருக்கும் ராணுவ தளங்களை கட்டுப்படும் இந்த விமானம், ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விமானம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்த போரில் ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் எண்ட்ரி கொடுக்கலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

டூம்ஸ்டே விமானம்
Tu-214PU என பெயரிடப்பட்ட இந்த விமானம், நடமாடும் கட்டுப்பாட்டு மையமாகும். ஒரு வேளை அணு ஆயுத போர் ஏற்பட்டால், வானத்தில் இந்த விமானத்தில் பறந்துக்கொண்டே.. கீழே உள்ள கட்டுப்பாட்டு மையங்களுக்கு உத்தரவு கொடுக்க முடியும். கீழே டவர் கோபுரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டாலும் கூட, நேரடியாக சேட்டிலைட் மூலம் கட்டளை பிறப்பிக்க முடியும். எனவே இந்த விமானம் வெளியில் வருகிறது எனில், பெருசா ஏதோ நடக்கப்போகிறது என்றுதான் அர்த்தம்.
ரஷ்ய அதிபருக்காக தனி சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த விமானம் ஈரானில் லேண்ட் ஆகியிருப்பதை, சர்வதேச விமான போக்குவரத்து துறை தகவல்கள் உறுதி செய்திருக்கின்றன. சமீப காலமாக ரஷ்யா மற்றும் ஈரான் இடையே ராணுவ ஒத்துழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக.. ஈரானுக்கும்-இஸ்ரேலுக்கும் நேரடி மோதல் நடக்க இருக்கும் இந்த நேரத்தில், ரஷ்ய விமானம் ஈரானுக்கு வந்திருப்பது, அமெரிக்காவை அதிர்ச்சியைடய செய்திருக்கிறது.
இந்த விமானத்தை அனுப்பியதன் மூலம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா வெளிப்படையாக எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இதையும் மீறி இஸ்ரேல், அமெரிக்கா சேர்ந்து ஈரானை தாக்கினால்.. உள்ளே நாங்கள் வருவோம் என்பதை ரஷ்யா மறைமுகமாக தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த விமானம் லேண்ட் ஆனது பற்றி இன்னும் ரஷ்யாவோ, ஈரானோ வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.