ஈரானுக்கு போகும் கத்தார் தூதர்கள்.. பஞ்சாயத்து எப்போது முடியும்? எகிறும் எதிர்பார்ப்பு! | Qatar Steps Up Mediation as US-Iran Ceasefire Teeters; Negotiators in Tehran to Resume Dialogue

Spread the love

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்க, கத்தார் சார்பில் தூதர்கள் ஈரானுக்கு போக இருக்கிறார்கள். இந்த பயணம் பலன் கொடுத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா சொல்லிவிட்டது. எனுவே யாரை வைத்து பேசுவது? என்பதுதான் கேள்வியாக இருந்தது. போன முறை பாகிஸ்தானை வைத்து பஞ்சாயத்து பேசப்பட்டது. இந்நிலையில் இந்த முறை கத்தார் தனது தூதர்களை ஈரானுக்கு அனுப்புகிறது.

Qatar

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் மீடீயாவில், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், ஆனால் பேச்சுவார்த்தை நடத்த ரெடிதான் என்றும் கூறியிருந்தார். இப்படி இருக்கையில்தான் கத்தார் சார்பில் தூதர்கள் ஈரானுக்கு போயிருக்கிறார்கள். ஈரானின் மாஷாத் நகருக்கு சென்ற அவர்கள், அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கின்றனர். சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு இரு நாடுகளையும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வைப்பதுதான் கத்தாரின் நோக்கம்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம். ஆனால், இப்போது தூதரக முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கியிருக்கிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கத்தாரின் முயற்சி வெற்றியடைந்ததால், அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா-இடையே பேச்சுவார்த்தை நடக்கும். இந்த பேச்சுவார்த்தைக்கு ஈரானை ஓகே சொல்ல வைக்க எகிப்தும் முயற்சிக்கும் என்று சொல்லப்படுகிறது.

பின்னணி இதுதான்

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா-ஈரான் இடையே போர் வெடித்தது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதனால் அரபு நாடுகளிலிருந்து இந்தியா உட்டபட உலக நாடுகளுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்தப்பட்டது. எனவே பெட்ரோல், டீசல், எல்பிஜி கேஸ் ஆகியவற்றின் விலை எக்குதப்பாக எகிற.. உலக நாடுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு அமெரிக்காவை சாந்தப்படுத்தியது.

ஒருவழியாக போர் நிறுத்தம் வரை வந்த அமெரிக்கா, தற்போது மீண்டும் ஈரான் மீது குண்டு வீசியிருக்கிறது. இதான் மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *