ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது.
ஈரானும் சரி… அமெரிக்காவும் சரி… இப்போது வரை சளைத்ததாகத் தெரியவில்லை. இரு நாடுகளும் மாறி மாறித் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன.
ஈரான் உச்சத் தலைவர் காமேனி இறந்துவிட்டால், ஈரானின் தலைமை மாறும்… ஈரானால் நீண்ட காலம் எதிர்த்து சண்டையிட முடியாது என்கிற பிளானில் தான் களத்தில் இறங்கின அமெரிக்காவும், இஸ்ரேலும்.
ஆனால், ஐந்து மாதங்கள் முடிந்தும் ஈரான் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டே தான் இருக்கின்றன. இன்னும் தாக்குதலுக்குத் தயார் என்கிற மோடிலேயே இருக்கிறது ஈரான்.

ஹெக்செத்தைக் கோபித்துக்கொண்ட ட்ரம்ப்?
ஆனால், அமெரிக்கா பக்கத்தில் இருந்து தான், “அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கில் ஆயுதங்கள் குறைந்தவிட்டன’ என்கிற சத்தங்கள் எட்டிப்பார்க்கின்றன.
சமீபத்தில், ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கேம்ப் டேவிட் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்திடம் கோபித்துக் கொண்டதாக கூறப்பட்டிருந்தது.