கிட்டத்தட்ட 10 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரான் போர் தொடங்கி வரும் வியாழக்கிழமையோடு (மே 28), மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன.

விலை உயர்விற்குக் காரணம் என்ன?
தரவுகளின் படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய மூன்று நிறுவனங்களும் மொத்தமாக ஒவ்வொரு நாளும் ரூ,1,000 கோடி அளவிற்கு நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளன.
இந்த நஷ்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான், இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால், இந்த விலை உயர்வும் மேலே கூறிய நஷ்டத்தைப் பாதி அளவுதான் ஈடு செய்யும் என்று கூறப்படுகிறது.