ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அவ்வளவு தான்: நெதன்யாகுவை போனில் வெளுத்துவிட்ட டிரம்ப்  – Kumudam

Spread the love

பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் சமீபத்தில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலின் முக்கிய ராணுவ விமானத் தளங்கள் மற்றும் நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகளை வீசியது. எனினும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வடகிழக்கில் மீண்டும் போர்பதற்றம் தொற்றி கொண்டது. நிலைமையை சமாளிக்க அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஈரான் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தவதாக அறிவித்தது. 

இதை தொடர்ந்து  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து  அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார். இது தொடர்பான உரையாடலை டிரம்ப் தெரிவிக்கும் போது,  “நான் நேதன்யாகுவை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்தும்படி கூறினேன். ‘ நெதன்யாகுவின் பட்டப்பெயரான பீபி நீங்கள் இனிமேல் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இல்லையெனில், மிக விரைவில் நீங்கள் உலக நாடுகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவீர்கள்’ என்று நான் அவரிடம் தீர்க்கமாகக் கூறிவிட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *