International
oi-Halley Karthik
கீவ்: நேற்று உக்ரைன் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட வணிக கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். இந்த கப்பலில் 5 இந்தியர்கள் இருந்த நிலையில், ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.
இந்தியர்களின் உயிரிழப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
