“நமக்குப் பயனுள்ளதாக இருந்ததை மற்றவர்களுக்கும் கொடுக்கலாமே” என்ற எண்ணம்தான் அடுத்தகட்ட முயற்சிக்கு காரணமாக இருந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக Green Salt தயாரித்து வரும் இவர், ஆரம்ப முதலீடாக ரூ.1,000-ல் தனது தொழில் பயணத்தைத் தொடங்கி, தற்போது மாதம் சுமார் ரூ.25,000 வரை வருமானம் ஈட்டி வருகிறார். ஆரம்பத்தில் சமூக சேவை நோக்கத்தில் சில மாதங்கள் இலவசமாக இந்த உப்பை மக்களுக்கு வழங்கியிருக்கிறார். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு, இதை ஒரு தொழிலாகத் தொடங்கியிருக்கிறார்.
முருங்கை, முடக்கத்தான், தூதுவளை, கரிசலாங்கன்னி, வல்லாரை, துத்திக் கீரை, முக்கிரட்டை என ஏழு வகையான மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டு உப்புகளைத் தயாரித்து வருகிறார்.
ஒவ்வொரு மூலிகையையும் குறிப்பிட்ட முறையில் சுத்திகரித்து, அளவோடு பயன்படுத்த வேண்டும். வழக்கமாக ஒரு ஸ்பூன் உப்பு பயன்படுத்தும் இடத்தில், Green Salt-யை அரை ஸ்பூன் பயன்படுத்தினாலே போதுமான உப்புத்தன்மை கிடைக்கும். இந்த முயற்சிக்கு EDII உள்ளிட்ட அமைப்புகளின் ஊக்கத்தொகையும், ஆதரவும் கிடைத்துள்ளது. மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), Green Salt-யை innovative product ஆக அங்கீகரித்து, COXBIT-ல் அவருக்கென தனி cabin ஒன்றையும் வழங்கியுள்ளது. Green Salt-க்கு FSSAI அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
ஏழு கீரைகள்… ஏழு விதமான பயன்பாடுகள்!
முருங்கைக்கீரை உப்பு: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. உடலுக்குத் தேவையான முக்கியத் தாதுக்கள் (Minerals) மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மன அழுத்தத்தைக் குறைத்து, புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
முடக்கத்தான் உப்பு: கால் வலி, நரம்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
தூதுவளை உப்பு: சளி மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
கரிசலாங்கன்னி உப்பு: கல்லீரல் ஆரோக்கியத்துக்கு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த உப்பைப் பயன்படுத்தியதன் விளைவாக, தனது கணவரின் LDL கொலஸ்ட்ரால் அளவு குறைந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.