உதயநிதி மேல் கைது நடவடிக்கை பாயுமா? விஜயின் மூவ் என்னவாக இருக்கும்? – Kumudam

Spread the love

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று காலை திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்ட பாலைவனம் போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதலமைச்சராக இருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்குமா? இல்லை நம் தலைவர் தான் இந்த நிலைமைக்கு விட்டிருப்பாரா?

இன்றைக்கு குறுவையை காப்பாற்ற முடியவில்லை. சம்பா என்ன நிலைமை ஆகும் என்று தவித்துக் கொண்டிருக்கும் நம் விவசாயிகளின் நிலைமை குறித்து எந்தவொரு கவலையும் இல்லாமல் நிர்வாக திறனற்ற முதலமைச்சராக விஜய் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகவிற்கும் இந்த காவிரி நீர் பிரச்சனை என்பது நீண்ட காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. காவிரிக்கு குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீர்வேன் என்று முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சொல்லி கொண்டிருக்கிறார். ஆனால் இதனை கண்டிக்க துப்பு இல்லாமல் கேள்வி கேட்க கூட   தைரியம் இல்லாமல் மத்திய அரசை பகைத்துக்கொண்டால் பிரச்சனை வந்து விடும் என்று இதுவரைக்கும் பாஜக என ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அந்த அளவிற்கு தைரியசாலியாக இருந்து கொண்டு இருக்கின்றார். 

முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறாக சில விசயங்களை பேசியதால் இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. அவருடைய இந்த பேச்சுக்கு, .வெ.. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதலமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணை முதலமைச்சராக இருந்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் இத்தகைய கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாக பேசியவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? அமைதி காக்க சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களை தடுக்கிறது. மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தஞ்சையில் அவதூறாக பேசினார் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் .வெ.. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ.செல்வகுமார் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினார். அதில், உதயநிதியின் பேச்சு, காணொளியை அடிப்படையாக கொண்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் .வெ.. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதால் கைது நடவடிக்கை எடுக்குமா? இல்லை தவெக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்  எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *