காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்டவர். 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 87 சதவீத வருகைப்பதிவு, 38 விவாதங்கள் மற்றும் 658 கேள்விகள் என நாடாளுமன்றத்தில் விஸ்வநாதன் காட்டிய வேகம் காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என கேள்வி எழுந்த போது கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் விஸ்வநாதனின் பெயரை முன்மொழியவே, உடனே “டிக்’ அடித்திருக்கிறது டெல்லி தலைமை.
ஆனால் மேலூர் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பமே வெடித்தது. பட்டியலின வேட்பாளர் எப்படி பொது தொகுதியில் வெற்றி பெற முடியும், அதுவும் அ.தி.மு.க கோட்டையில் தொகுதிக்கு அறிமுகமில்லாதவரை வெற்றி பெற வைக்க முடியாது என கட்சியினர் போர்கொடி தூக்கியதோடு வேட்புமனுதாக்கல் செய்ய கூடாது என விஸ்வநாதனுக்கும் அழுத்தமும் கொடுத்து வந்தனர்.