உழைப்பின் பலன் மே 4-இல் கிடைக்கும் : மே தின விழாவில் ஸ்டாலின் ஆரூடம் – Kumudam

Spread the love

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில், “நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்புக்கு பலன் வருகிற மே 4 ஆம் தேதி பெறவிருக்கிறோம். அதில் ஒரு துளி அளவும் மாற்றமில்லை. திமுக தொண்டர்களின் உழைப்புக்கான நல்ல பலன் மே 4-இல் கிடைக்கும். இதை நான் கருத்துக் கணிப்புகளை வைத்து கூறவில்லை. களத்தை பார்த்ததால் கூறுகிறேன்.” 

முன்னதாக அவர் மே தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், “உழைப்பு என்பது மனித இனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அதன் அரசியல், சமூகப் பரிணாமத்திற்கும் அடிப்படைக் காரணியாக இருக்கும் உந்து சக்தியாகும். உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொழிலாளர்களுக்காக மே நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சென்னையில் மே தினப் பூங்கா, தொழிலாளர் நல வாரியம் என எண்ணற்ற பங்களிப்புகளைக் திமுக ஆட்சிதோறும் பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் செய்து வந்தனர். கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்த போதெல்லாம் தொழிலாளர் நலம்காக்க எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றியது வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளாக மின்னிக் கொண்டிருக்கிறது.

உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே நாளில், திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உணமைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும் என்ற உறுதியையும், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *