`ஊழல் செய்பவர்கள் 6 மாதத்திற்குள் வழிக்கு கொண்டுவரப்படுவார்கள்' – நிர்வாகிகளிடம் ஜான் ஆரோக்கியசாமி

Spread the love

தவெகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்மட்ட அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலளித்த பேசியுள்ள தவெகவின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, `முந்தைய ஆட்சிக் காலங்களில் உருவான நிர்வாக நடைமுறைகளை மாற்றுவதற்கு கால அவகாசம் தேவைப்படும்’ என்று கூறியுள்ளார்.

பனையூர் தவெக அலுவலகம்

`திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் பல அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் ஊழல் மற்றும் லஞ்ச கலாச்சாரத்திற்கு பழக்கப்பட்டு விட்டனர். அவர்களை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. தற்போது மேல்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு நிர்வாக சீர்திருத்தங்களை முதல்வர் தொடங்கியுள்ளார். கீழ்மட்ட அதிகாரிகள் பலரும் கடந்த இரண்டு ஆட்சிகளிலும் பணியாற்றியவர்கள் என்பதால் உடனடியாக மாற்றம் ஏற்படாது’ என்றுள்ளார்.

`அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். இன்னும் 6 மாதங்களுக்குள் லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளதாக’ கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஜான் ஆரோக்கியசாமி பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *