தொடர்ந்து பேசியவர், “‘கருப்பு’ படத்திற்கான திரைக்கதையை நாங்க ரொம்ப மாதங்கள் எழுதினோம். ஏன்னா, ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’னு மூன்று படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான்.
ஆனா, அது மாஸ் படங்கள் கிடையாது. எங்களுக்கு மாஸ் கமர்ஷியல் படத்திற்கு திரைக்கதை எழுதுவதுதான் கொஞ்சம் சவாலாக இருந்தது. புதுசாகவும் இருந்தது.
இப்படியான கமர்சியல் விஷயங்கள் நம்ம படத்துல இருக்கலாமானு எங்களுக்குள்ள சில சீன்கள் பத்தி டிஸ்கஷன் வரும். ஆனா, அதை எப்படி வேறு வழியில செய்யலாம்னு முடிவு பண்ணி திரைக்கதைக்குள் அமைத்தோம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா, எங்க ரைட்டர்ஸ் டீம் எல்லோருமே நாங்க சொல்கிற விஷயத்துல பிடிவாதமாக இருப்போம்.
எங்க எழுத்தாளர் குழுவுல இருக்கிற அஷ்வின், ராகுல்னு எல்லோரும் அவங்க சொல்ற விஷயத்துல ரொம்ப பிடிவாதமாக இருப்பாங்க. இது ரைட்டிங்ல ரொம்ப ஆரோக்கியமான விஷயமாக இருந்துச்சு. எல்லோருமே கமர்ஷியல் கதை எழுதுவது ரொம்ப சுலபம்னு சொல்வாங்க.
ஆனா, அதுதான் எங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்துச்சு. இந்தப் படம் உருவாக மூன்று வருஷம் ஆகியிருக்கு. அதுல ரெண்டு வருஷம் நாங்க எழுதுறதுக்கு நேரம் எடுத்துகிட்டோம்” என்றவர் ஆர்.ஜே. பாலாஜியுடனான அறிமுகம் பற்றி, “‘எல்.கே.ஜி’ படத்துல நானும் ஆர்.ஜே. பாலாஜியும் கோ டைரக்டராக வேலை பார்த்தோம்.
அவர் நடிச்சிருந்தார். அந்தப் படத்தை கே.ஆர். பிரபு இயக்கியிருந்தார். அப்போ, டிஸ்கஷன்ல எனக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் எல்லா விஷயங்களும் ஒத்துப்போச்சு. நான் யோசிக்கிற விஷயங்களை அவரும் யோசிப்பாரு. அவர் யோசிக்கிற விஷயங்களையே நானும் சொல்வேன்.