2017-ம் ஆண்டு இவர் தலைமைப் பொறுப்பிற்கு வந்தபோது, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.4,400 கோடி. ஆனால், அதன் தற்போதைய லாபம் ரூ.16,000 கோடிக்கும் மேல்.
இது மாதிரி பல டாடா நிறுவனங்களை லாபப் பாதைக்கு கொண்டு சென்றதில் என்.சந்திரசேகரனின் பங்கு முக்கியமாக உள்ளது.
இவரது தலைமைக் காலத்தின் போது, டாடா நிறுவனத்திற்கு சில பிரச்னைகளும் வந்துள்ளது. அதையும் மறுப்பதற்கில்லை.
ஏர் இந்தியா நிறுவனம் தற்போது டாடா குழுமத்தின் கையில் உள்ளது. தற்போதைய உலக சூழலில், எரிபொருள் விலை உயர்வு, வான்வெளி மூடல்கள் என விமான நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள்.
இதையெல்லாம் சமாளித்து ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக மீட்டெடுக்க டாடா குழுமத்திற்கு 5-10 ஆண்டுகள் ஆகும்.
டாடா டிஜிட்டல் நிறுவனம் தற்போது ரூ.5,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
இது மாதிரியான சறுக்கல்களையும் மறுப்பதற்கில்லை.
டாடா குழுமத்திற்கு பல சிறப்புகளைச் சேர்த்த ஒரு நபர் தற்போது ஏன் வெளியேறுகிறார் என்கிற கேள்வி எழுகிறதா? அதற்கு தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தம்பி மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா தான் காரணம்.
அதாவது டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியிலிட வேண்டும் என்பது என்.சந்திரசேகரனின் ஐடியா. ஆனால், இதை நோயல் டாடா விரும்பவில்லை.