`தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கையா?'- ராகுல் பேச்சு; பாஜக கண்டனம்!

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கையைக் விமர்சிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

ரச்னாத்மக் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டிருக்கிறார். அந்த மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “மத்திய அரசுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்றால் என்னவென்றே தெரியவில்லை.

 மோடி - மெலோனி
மோடி – மெலோனி

தலைவர்களைக் கட்டிப்பிடிப்பதுதான் வெளிநாட்டுக் கொள்கை என்று மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்திருக்கிறார். இதை நேரடியாகச் செய்து காட்டுவதற்காக, மேடையிலிருந்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித்தைக் கட்டிப்பிடித்திருக்கிறார்.

அப்போது சந்தீப் தீட்சித், “இத்தாலி பிரதமர் மெலோனி என்று நினைத்து என்னைக் கட்டிப்பிடிக்கவில்லையே?” என ஜோக்காகக் கேட்க, அதற்கு ராகுல் காந்தி, “நான் இன்னும் அந்த அளவுக்குப் போகவில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

இந்த உரையாடல் பாஜக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராகுல் காந்தி மற்றும் சந்தீப் தீட்சித் பேச்சுக்கு பாஜக-வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அந்த வகையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான சம்பித் பத்ரா, “ராகுல் காந்தியின் பேச்சும் நடத்தைகளும் நாளுக்கு நாள் தரம் தாழ்ந்து வருகின்றன. நாட்டின் பிரதமர் மற்றும் இத்தாலி நாட்டின் தலைவர் குறித்துப் பயன்படுத்திய தரமற்ற சொற்கள் நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல” எனக் கண்டித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *