என் தாய், தந்தையர், சகோதரர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார்கள் என்பது துயரத்தைத் தருகிறது!” – மோகன்லால் |”It brings me sorrow that my mother, father, and brother have left me!” — Mohanlal

Spread the love

“என்னுடைய பழைய படங்களின் சில காட்சிகளைப் பார்க்கும்போது என் மனம் சோகத்தில் மூழ்கிவிடும். அதற்குக் காரணம், அந்த பிரேம்களில் என்னுடன் நின்றிருந்த பல நடிகர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதுதான்.

அந்த சோகம் என்னை ஆட்கொள்கிறது. ஆனால் துக்கப்படுவதால் என்ன பயன்? நாளை நானும் மறைந்துவிடுவேன். அதுதான் யதார்த்தம்.

இந்த உண்மையை முழுமையாகத் தெரிந்தே நான் இப்போதும் வருந்துகிறேன். கண்ணீர் என்பது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது. உலகம் எத்தனையோ தத்துவங்களைக் கண்டுவிட்டது.

ஆனாலும் மனிதன் இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறான். நானும் ஒரு சாதாரண மனிதன்தானே! என் தாய், தந்தையர், சகோதரர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார்கள் என்பது எனக்குப் பெரும் துயரத்தைத் தருகிறது.

ஆனாலும், நான் ஒருபோதும் தனிமையாக உணர்ந்ததில்லை. கண்களை மூடினால் அவர்கள் எனக்குள்ளேயே இருக்கிறார்கள். என்னால் அவர்களைத் தொடவோ பார்க்கவோ முடியாது, அவ்வளவுதான்” என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *