சில தொண்டர்களும் நிர்வாகிகளும் முதல்வரின் அறையின் முன்பு நின்று புகைப்படம் எடுக்க விரும்பி தலைமைச் செயலகத்தை சுற்றித் திரிவதால் எம்.எல்.ஏ பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி காவலர்கள் கெடுபிடியும் காட்டுகின்றனர்.

தவெக தனிப்பெரும் கட்சியாக வந்துவிட்ட உடனேயே தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்களை ஊழியர்கள் சுத்தம் செய்து பக்காவாக புதிய அமைச்சர்களுக்கென ரெடி செய்து வைத்துவிட்டனர். விஜய்யோடு அமைச்சரவையில் 9 பேர் மட்டுமே இப்போது பதவியேற்றுக் கொண்டனர். அந்த அமைச்சர்களில் சிலர் பதவியேற்ற அன்றே தங்களுக்கு எந்த அறை வசதியாக இருக்குமென பார்த்து தேர்வு செய்து இடம்பிடித்திருக்கின்றனர்.
அந்தவகையில் புஸ்ஸி ஆனந்த் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் அறையிலும், அருண்ராஜ் கே.என்.நேருவின் அறையிலும், ராஜ்மோகன் பி.டி.ஆரின் அறையிலும் செட்டில் ஆகியிருக்கின்றனர். இன்னும் சிலர் தற்காலிமாக ஒரு அறையில் குடியேறிவிட்டு, பின்னர் சௌகரியமான அறையை கேட்டுப் பெறும் முடிவில் இருக்கின்றனராம்.
எந்த முதல்வரின் கான்வாயையும் செய்தித் தொடர்புதுறையின் கார் ஒன்று எப்போதும் பாலோ செய்யும். காருக்குள் கேமராமேன்கள் இருப்பார்கள். போக வேண்டிய இடம் வந்தவுடன் முதல்வர் காரை விட்டு இறங்குகையில் இவர்களும் காரை விட்டு இறங்கி தடதடவென ஓடி போட்டோ எடுப்பார்கள். இதுதான் வழக்கம். ஆனால், விஜய் முதல்வரான பின்னர் செய்தித் தொடர்புத்துறையின் காரின் மேல் 2 கேமராமேன்கள் உட்கார்ந்து அவரின் பிரசார பாணியில் கான்வாயை முழுவதும் பாலோ செய்கின்றனர்.