ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ. 1 கட்டணத்தில் முடி வெட்டும் சலூன் கடைக்காரரின் சேவையை ஓசூர் வட்டார மக்கள் பாராட்டி வருகிறார்கள்.
சலூன்கள் நவீனமயமாகி வரும் சம காலத்தில் முடி வெட்டுவதற்கான கட்டணமும் அதிகரித்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்குச் சாதாரண சலூனில் முடிவெட்டுவதே கஷ்டத்தை ஏற்படுத்தும் சூழலில் அதிகமாக வளர்ந்த பின்பு முடி வெட்டுகின்ற நிலையோ, அல்லது அப்படியே விட்டுவிடுகின்ற நிலையோதான் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி செல்லும் ஏழை மாணவர்கள் ஆசிரியர்களின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமலும், பொது வெளியில் சக மனிதர்களால் கேலிக்கு ஆளாகி, பல்வேறு உளவியல் சிக்கலைச் சந்திக்கிறார்கள்.