ஏ.டி.எம் பணத் தட்டுப்பாடு: டிஜிட்டல் இந்தியா பயணத்தில் புதிய சவால்கள்|Less Cash in ATMs: A Bigger Problem Than You Think

Spread the love

ஏ.டி.எம்களில் இந்தப் பணப் பற்றாக்குறைக்குக் கூறப்படும் காரணங்கள்…

> ஈரான் போரினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், ஏ.டி.எம்களுக்கு பணம் கொண்டு செல்ல ஆகும் செலவுகள் இன்னும் அதிகமாகிறது.

> ஏ.டி.எம் ஆபரேட்டர்களுக்கு ஆபரேஷனல் விலை அதிகமாகிறது.

> நம் நாடு முழுக்க முழுக்க டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது. அதனால், ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பது குறைந்துவிட்டது.

இந்தியாவிலேயே பணப் பற்றாக்குறை உள்ளதா?

இந்தக் கட்டுரையை மேலோட்டமாகப் படிக்கும் போது, ஏ.டி.எம்களில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிலேயே பணப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்று சிலர் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடலாம்.

உண்மை என்னவெனில், இந்தியாவில் பணப்புழக்கம் வழக்கத்தை விட அதிகமாகத்தான் ஆகியுள்ளது.

சில அறிக்கைகளின் படி, கடந்த மே 22-ம் தேதியில், இந்தியாவில் ரூ.42.54 டிரில்லியனுக்குப் பணப்புழக்கம் இருந்திருக்கிறது.

2025-ம் ஆண்டு மே மாதம் ரூ.41.26 டிரில்லியனாக இருந்திருக்கிறது. ஆக, ஓராண்டில் பணப்புழக்கம் அதிகரிக்கத்தான் செய்துள்ளது.

ஏ.டி.எம் தொழில் கூட்டமைப்பு கூறுவது படி, இந்தியாவில் உள்ள ஏ.டி.எம்களில் லோட் செய்யப்படும் பணத்தின் அளவுதான் குறைந்திருக்கிறதே தவிர, பணப்புழக்கம் பாதிக்கப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *