ஐரோப்ப இளவரசியை கரம்பிடிக்கும் பாகிஸ்தான் அதிபரின் மகன் பிலாவல் பூட்டோ? பின்னணி | Bilawal Bhutto Zardari set to marry liechtenstein princess? details here

Spread the love

International

oi-Nantha Kumar R

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்த நாட்டின் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் மகனுமான பிலாவல் பூட்டோ ஐரோப்பிய நாட்டின இளவரசியை கரம்பிடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் அதுபற்றி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

bilawal-bhutto-zardari-set-to-marry-liechtenstein-princess-details-here

பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ மற்றும் தற்போதைய அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ. இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். இவருக்கு வயது 38.

பிலாவல் பூட்டோ கடந்த 2022 முதல் 2023 வரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் தான் பிலாவல் பூட்டோ ஐரோப்பா நாட்டின் இளவரசியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஐரோப்பிய நாடாக லிச்சென்ஸ்டீன் உள்ளது. இந்த நாடு சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவிற்கு இடையே அமைந்துள்ளது. இந்த லிச்சென்ஸ்டீன் நாட்டிற்கு சமீபத்தில் பாகிஸ்தான் அதிபரும், பிலாவல் பூட்டோவின் தந்தையுமான ஆசிப் அலி ஜர்தாரி பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது பிலாவல் பூட்டோவின் திருமணம் தொடர்பாக லிச்சென்ஸ்டீன் நாட்டின் இளவரசி குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் பிலாவல் பூட்டோ ஐரோப்பிய இளவரசியை கரம்பிடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இளவரசியின் வயது 26 என்றும், இவர் ஆஸ்திரியாவின் ஆர்ச்டியூக் கார்ல் மற்றும் பிரான்செஸ்கா வான் திசென்-போர்னிமிசா ஆகியோரின் மகளும், ஹப்ஸ்பர்க்-லோரைன் வம்சத்தை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி ஆஸ்திரியாவின் கடைசி பேரரசராகவும் ஹங்கேரியின் மன்னராகவும் இருந்த முதலாம் கார்லின் கொள்ளுப் பேத்தி என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ தொடங்கியது.

இருப்பினும் இதுதொடர்பாகபிலாவல் பூட்டோ அல்லது அவரது குடும்பத்தினர் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் பிலாவல் பூட்டோ கட்சியின் கராச்சி மேயரும், முக்கிய தலைவருமான முர்தாசா வஹாப் கூறும்போது, ”கட்சியின் தலைவரின் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்த செய்திகள் தவறானவை.

அதோடு அடிப்படை ஆதாரமற்றவை” என்று விளக்கி பரவும் தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் பற்றி இதுவரை பிலாவல் அல்லது அவரது குடும்பத்தினர் தரப்பிலிருந்து இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *