ஓமன் வளைகுடாவில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் (Palau) கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் செட்டபெல்லோ மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம்.
அந்தக் கப்பலில் இருந்து மூன்று இந்தியர்களைக் காணவில்லை என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
“அவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக’ தற்போது இந்தியக் கப்பல் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த எக்ஸ் தளப் பதிவு:
“பாலாவ் நாட்டுக்கொடியுடன் பயணித்த ‘எம்.டி செட்டபெல்லோ’ கப்பலில் நிகழ்ந்த கொடூரமான விபத்து குறித்து அறிந்து நான் ஆழந்த வருத்தமடைகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக, ஆரம்பத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மூன்று இந்திய மாலுமிகளில், தற்போது இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நமது கடல்சார் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். இந்த இக்கட்டான தருணத்தில் மோடி அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது.