கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன? | DMK Councillors in Black Shirts; Mayor Priya Writes to CM Vijay – What’s the Reason?

Spread the love

அம்மா உணவகம் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் பெருமிதமாகப் பேசுகின்றனர். சென்னையில் அம்மா உணவம் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அம்மா உணவகத்துக்காகச் செலவளிக்கிறோம்.

காலை உணவுத்திட்டம் தனியார் நிதி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படுகிறது. அந்தப் பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்வதற்கான வாகன செலவைக் கூட மாநகராட்சிதான் ஏற்றிருக்கிறது. அதற்காகவாது நிதியை விடுவிக்க வேண்டும். நிதி விடுவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் திமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறோம்.

துணை மேயர் மகேஸ் குமார்

துணை மேயர் மகேஸ் குமார்

நிதி நெருக்கடியில் இருக்கிறோம் எனக் கூறி 21,000 கோடி கடன் வாங்கி தமிழக அரசு திட்டங்களை நிறைவேற்றுகிறது. எம்.எல்.ஏக்களுக்கு கார் கொடுக்கிறோம் என்றெல்லாம் அறிவிக்கிறார்கள். அதேமாதிரி, மாநகராட்சிக்கும் முதல்வரிடம் கூறி சிறப்பு நிதியை விடுவிக்க வேண்டும். மேயர் பிரியா இதுசம்பந்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பாக முதல்வருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார். மாநகராட்சி ஆணையர் நகராட்சி நிர்வாகத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரிடம் பேசி நிதியைப் பெற்று வாருங்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *