கறி சமைக்க `ஓசி’-யில் வாத்து கேட்ட போதை கும்பல் – தர மறுத்ததால் 100 வாத்துகளை வெட்டி வீசிய கொடூரம்!

Spread the love

வாத்து உரிமையாளர் கூறாமல் யாருக்கும் இலவசமாக கொடுக்க முடியாது என முப்பிடாதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரத்துடன் அவர்கள் தகராறு ஈடுபட்டதும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். தாங்கள் கேட்டும் இலவசமாக வாத்துக் கொடுக்காத ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல் நேற்று (26-ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு மீண்டும் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

கைதானவர்கள்

கைதானவர்கள்

அரிவாள் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற அந்த கும்பல், முப்பிடாதியின் எதிர்ப்பையும் மீறி வாத்துகளை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அத்துடன் கொடூரமாக கம்பால் தாக்கியுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் கொல்லப்பட்டன. மேலும் பலத்த காயமடைந்த 45 வாழ்த்துக்கள் உயிருக்கு போராடி வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் முப்பிடாதி புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தருவையைச் சேர்ந்த மாயா, ராஜேஷ், ஹரி மற்றும் சேரன்மகாதேவியை சேர்ந்த சோனு ஆகியோருக்குத் தொடர்வு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதில் ராஜேஷ், மாயா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹரி, சோனு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். ஓசிக்கு வாத்து கொடுக்க மறுத்ததால் நூற்றுக்கும் அதிமமான வளர்ப்பு வாத்துகளை போதைக் கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் முன்னீர்பள்ளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *