குளியலைத் தவிர்க்கும் நாள்களில் டெபிட் ஸ்பாஞ்சிங் (Tepid Sponging) முறையைப் பின்பற்றலாம். குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும்போது பொதுவாகப் பின்பற்றப்படும் சிறந்த முறை டெபிட் ஸ்பாஞ்சிங். இதில் ஈரத்துணியைக் கொண்டு குழந்தையின் உடல் முழுவதும் ஒற்றி எடுக்கப்படும். முழுமையான குளியலுக்கு பதிலாக, இந்த முறையில் உடலை ஈரத்துணியால் துடைத்து எடுப்பது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

காய்ச்சல் இருக்கும் போது குளித்தால் உடனே காய்ச்சல் குணமாகிவிடும் என்பது போன்ற தவறான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அவற்றைப் பார்த்துவிட்டுப் பெற்றோர்கள் பலரும் காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறார்கள். இது முற்றிலும் தவறான செயல். எனவே, காய்ச்சல் இருக்கும் நேரத்தில் குளிக்காமல், உடலுக்குப் போதிய ஓய்வு (Rest) கொடுத்துப் பராமரிப்பதுதான் உடல ஆரோக்கியத்திற்கு நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.