காவிரி விவகாரம்: திமுக மீது அமைச்சர் நிர்மல் குமார் கடும் குற்றச்சாட்டு|Tamil Nadu Minister Targets DMK Amid Fresh Cauvery Water Dispute

Spread the love

பல வாரங்களாகப் பல தரப்பினர் சொன்னது என்னவென்றால், கர்நாடகாவில் இருக்கும் டி.கே. சிவகுமார் அவர்களுக்கும் திமுக குடும்பத்திற்கும் இடையே கட்சியைத் தாண்டி பல நல்ல உறவுகள் இருக்கிறது.

பல வருடங்களாகவே இவர்களுக்குள் நல்ல பிணைப்பு உள்ளது. அதனால் திமுகவினர் என்ன சொல்வார்களோ அதைத்தான் கர்நாடகாவிலும் செய்வார்கள். டி.கே. சிவகுமார் அனைத்தையும் விட திமுக குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல வழிகளில் விரும்பினார்.

டி.கே.சிவக்குமார் - ஸ்டாலின்

டி.கே.சிவக்குமார் – ஸ்டாலின்

காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதை விட டி.கே. சிவகுமார், திமுக குடும்பம் மற்றும் ஸ்டாலின் அவர்கள் சொல்வதைத்தான் அதிகமாகக் கேட்பார் என்று பல தரப்பினரும் சொல்லி வந்தார்கள்.

அதேபோல்தான் கடந்த ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளும் இருக்கின்றன. ஏனெனில், அவர் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறாரோ அதைத்தான் திமுக சொல்கிறது. திமுக சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார்.

“தமிழக முதல்வர் தனிமைப்பட்டு நிற்கிறார்” என்ற வார்த்தை, எந்த வகையிலும் தமிழக மக்களுக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் தெரிவித்தது போல இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *